• Sep 21 2024

அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன - சுமந்திரன் தெரிவிப்பு!

Tamil nila / Jul 28th 2024, 6:52 am
image

Advertisement

அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன என  இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வாரம் முழுவதும் நாங்கள் கறுப்பு யூலை என்று அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலே24ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன் செயல்களை நினைவு கூறுகிற ஒரு வாரமாக இதனை நாங்கள் அனுஷ்டிக்கிறோம்.

இந்த வாரத்திலே பல காலமாக பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டு வந்து இறுதியிலே 83ஆம் ஆண்டு மிக மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.அரச இயந்திரங்களினாலே அரசாங்கங்களுடைய நிகழ்ச்சி நிரலிலே தான் இந்த வன்முறைகள் காலத்துக்கு காலம் நடைபெற்று வந்திருக்கின்றன.

50ஆம் ஆண்டுகளிலே அதன் பின்னர் 71 ஆம் ஆண்டு 81ஆம் ஆண்டு என்று சொல்லி தொடர்ச்சியாக தெற்கிலே வாழ்கிற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை பரயோகிக்கப்பட்டிருக்கிறது. 

அந்த வன்முறைகளிலே முக்கிய விடயத்தை அவர்கள் கண்ணும் கருத்துமாக அவதானித்திருக்கிறார்கள் அது தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை சீரழிக்கிறது எங்களுடைய வர்த்தகர்கள் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைத்திருந்தவர்கள் அவர்களுடைய வர்த்தக ஸ்தாபனங்கள் கடைகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன ஆகவே இந்த அரச நிகழ்ச்சி நிரலிலே தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை அழிப்பது  ஒரு பெரிய முக்கிய பங்காக இருந்திருக்கிறது.

இப்பொழுது நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது தங்களுடைய பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டார்கள் எங்களை அழிப்பதாக நினைத்துக்கொண்டு இறுதியிலே நாட்டினுடைய பொருளாதாரத்தையும் சீரழித்திருக்கிறார்கள் எங்களுடைய வர்த்தகர்களுடைய பொருளாதாரத்தை அழித்தது மட்டுமல்ல அதன் பிரதி பலனாக பல ஆற்றல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியே போய்விட்டார்கள் அவர்கள் தனவந்தர்களாக வாழுகிறார்கள் இந்த வன்முறைகளினாலே தான் நாட்டிலே அதற்கு பிறகு மூன்று தசாப்த யுத்தமும் நடந்து அதற்கும் பல விதமான செலவீனங்கள் ஏற்பட்டன.

வன்முறைகள் நடைபெறுகிற காலத்திலே கொழும்பில் வாழ்ந்தவன் என்ற ரீதியிலே எனக்கு நேரடியான அனுபவங்கள் உண்டு 77ஆம் ஆண்டிலே அரசாங்கம் வன்முறையாலே பாதிக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக தலைநகரிலே வைத்து பாதுகாக்க முடியாது என்று சொல்லி எங்களையெல்லாம் விமானத்திலே இலவசமாக அனுப்பி வைத்தார்கள் 83ஆம் ஆண்டு பயங்கர வன்முறை நடந்த போது நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு ஓடி வேறு இடங்களிலே புகலிடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது முதலாவதாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிக் கப்பலிலே வந்தவன் நான். 

மூன்று நாட்களாக தொடர்ச்சியாக எதுவித உணவுமில்லாமல் வந்திருந்தேன் ஏனென்றால் 29ஆம் திகதி அந்த கப்பல் துறைமுகத்திலே இருந்து புறப்பட இருந்த வேளையிலே மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள் ஆகையினாலே இனிமேலும் கப்பல் துறைமுகத்திலே இருப்பது பாதுகாப்பில்லை என்று சொல்லி உண்வு இல்லாமலே கப்பல் புறப்பட்டது.

நாங்கள் காங்கேசந்துறைக்கு வந்து சேர்ந்த பிறகுதான் மூன்று நாட்களுக்கு பிறகு முதல்தடவையாக உணவு உட்கொண்டோம் இப்படியான பலவிதமான துன்பங்கள் தொல்லைகளை விட மோசமான துன்பங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கின்றன. எங்களுடைய மக்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் உடமைகளை இழந்திருக்கிறார்கள்.

என்னுடைய அனுபவத்திலே நான் சொன்னதைப் போல விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் அரசாங்கமே எங்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பது என்பது எங்களுடைய தாயக பூமியிலேதான் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று அரசாங்கமே ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். பல இடங்களிலே நான் தெற்கிலே சிங்கள மக்களோடு பேசுகிற போது இதை சொல்லியிருக்கிறேன். 

தாயகம் என்று சொல்லுகிற போது அது சிலருக்கு பிடிப்பதில்லை நான் இந்த உதாரணங்களைத்தான் சொல்லி சொல்லுகிறேன் இது என்னுடைய தாயகம் ஆனபடியினால் தான் இங்கே நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று அரசாங்கமே ஏற்றுக்கொண்டு என்னை என்னுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது இந்த இரண்டு தருணங்களிலும் ஆகையினாலே நாங்கள் வடக்கு கிழக்கை எங்களுடைய தாயகம் என்று சொல்லுவதை மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றன.அதுதான் உண்மை ஆகையினால் தான் எங்களுடைய பாதுகாப்பான பிரதேசங்களில் நாங்கள் எங்களை ஆளுகிறதான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்.

இந்த வாரத்திலே விசேடமாக கறுப்பு ஜூலை அனுஷ்டிக்கிற போது இந்த வன்முறைகளிலே சிக்குண்டு உயிரை இழந்தவர்களையும் உடமைகளை இழந்தவர்களையும் பல விதமான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களையும் நாங்கள் உணர்வோடு நினைவு கூற வேண்டும். என்றார். 

அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன - சுமந்திரன் தெரிவிப்பு அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன என  இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த வாரம் முழுவதும் நாங்கள் கறுப்பு யூலை என்று அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறோம் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலே24ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரைக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன் செயல்களை நினைவு கூறுகிற ஒரு வாரமாக இதனை நாங்கள் அனுஷ்டிக்கிறோம்.இந்த வாரத்திலே பல காலமாக பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டு வந்து இறுதியிலே 83ஆம் ஆண்டு மிக மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.அரச இயந்திரங்களினாலே அரசாங்கங்களுடைய நிகழ்ச்சி நிரலிலே தான் இந்த வன்முறைகள் காலத்துக்கு காலம் நடைபெற்று வந்திருக்கின்றன.50ஆம் ஆண்டுகளிலே அதன் பின்னர் 71 ஆம் ஆண்டு 81ஆம் ஆண்டு என்று சொல்லி தொடர்ச்சியாக தெற்கிலே வாழ்கிற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை பரயோகிக்கப்பட்டிருக்கிறது. அந்த வன்முறைகளிலே முக்கிய விடயத்தை அவர்கள் கண்ணும் கருத்துமாக அவதானித்திருக்கிறார்கள் அது தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை சீரழிக்கிறது எங்களுடைய வர்த்தகர்கள் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைத்திருந்தவர்கள் அவர்களுடைய வர்த்தக ஸ்தாபனங்கள் கடைகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன ஆகவே இந்த அரச நிகழ்ச்சி நிரலிலே தமிழ் மக்களுடைய பொருளாதாரத்தை அழிப்பது  ஒரு பெரிய முக்கிய பங்காக இருந்திருக்கிறது.இப்பொழுது நாடு வங்குரோத்து அடைந்திருக்கின்றது தங்களுடைய பொருளாதாரத்தையும் சீரழித்து விட்டார்கள் எங்களை அழிப்பதாக நினைத்துக்கொண்டு இறுதியிலே நாட்டினுடைய பொருளாதாரத்தையும் சீரழித்திருக்கிறார்கள் எங்களுடைய வர்த்தகர்களுடைய பொருளாதாரத்தை அழித்தது மட்டுமல்ல அதன் பிரதி பலனாக பல ஆற்றல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியே போய்விட்டார்கள் அவர்கள் தனவந்தர்களாக வாழுகிறார்கள் இந்த வன்முறைகளினாலே தான் நாட்டிலே அதற்கு பிறகு மூன்று தசாப்த யுத்தமும் நடந்து அதற்கும் பல விதமான செலவீனங்கள் ஏற்பட்டன.வன்முறைகள் நடைபெறுகிற காலத்திலே கொழும்பில் வாழ்ந்தவன் என்ற ரீதியிலே எனக்கு நேரடியான அனுபவங்கள் உண்டு 77ஆம் ஆண்டிலே அரசாங்கம் வன்முறையாலே பாதிக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக தலைநகரிலே வைத்து பாதுகாக்க முடியாது என்று சொல்லி எங்களையெல்லாம் விமானத்திலே இலவசமாக அனுப்பி வைத்தார்கள் 83ஆம் ஆண்டு பயங்கர வன்முறை நடந்த போது நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு ஓடி வேறு இடங்களிலே புகலிடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது முதலாவதாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அகதிக் கப்பலிலே வந்தவன் நான். மூன்று நாட்களாக தொடர்ச்சியாக எதுவித உணவுமில்லாமல் வந்திருந்தேன் ஏனென்றால் 29ஆம் திகதி அந்த கப்பல் துறைமுகத்திலே இருந்து புறப்பட இருந்த வேளையிலே மிக மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள் ஆகையினாலே இனிமேலும் கப்பல் துறைமுகத்திலே இருப்பது பாதுகாப்பில்லை என்று சொல்லி உண்வு இல்லாமலே கப்பல் புறப்பட்டது.நாங்கள் காங்கேசந்துறைக்கு வந்து சேர்ந்த பிறகுதான் மூன்று நாட்களுக்கு பிறகு முதல்தடவையாக உணவு உட்கொண்டோம் இப்படியான பலவிதமான துன்பங்கள் தொல்லைகளை விட மோசமான துன்பங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கின்றன. எங்களுடைய மக்கள் உயிரை இழந்திருக்கிறார்கள் உடமைகளை இழந்திருக்கிறார்கள்.என்னுடைய அனுபவத்திலே நான் சொன்னதைப் போல விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் அரசாங்கமே எங்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பது என்பது எங்களுடைய தாயக பூமியிலேதான் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என்று அரசாங்கமே ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். பல இடங்களிலே நான் தெற்கிலே சிங்கள மக்களோடு பேசுகிற போது இதை சொல்லியிருக்கிறேன். தாயகம் என்று சொல்லுகிற போது அது சிலருக்கு பிடிப்பதில்லை நான் இந்த உதாரணங்களைத்தான் சொல்லி சொல்லுகிறேன் இது என்னுடைய தாயகம் ஆனபடியினால் தான் இங்கே நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று அரசாங்கமே ஏற்றுக்கொண்டு என்னை என்னுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது இந்த இரண்டு தருணங்களிலும் ஆகையினாலே நாங்கள் வடக்கு கிழக்கை எங்களுடைய தாயகம் என்று சொல்லுவதை மாறி மாறி வந்த இலங்கை அரசாங்கங்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றன.அதுதான் உண்மை ஆகையினால் தான் எங்களுடைய பாதுகாப்பான பிரதேசங்களில் நாங்கள் எங்களை ஆளுகிறதான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம்.இந்த வாரத்திலே விசேடமாக கறுப்பு ஜூலை அனுஷ்டிக்கிற போது இந்த வன்முறைகளிலே சிக்குண்டு உயிரை இழந்தவர்களையும் உடமைகளை இழந்தவர்களையும் பல விதமான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களையும் நாங்கள் உணர்வோடு நினைவு கூற வேண்டும். என்றார். 

Advertisement

Advertisement

Advertisement