• Sep 18 2024

மீண்டும் தலைதூக்குகின்றது வன்முறை- ரணில் - அநுர கூட்டைத் தோற்கடிக்க வேண்டும் - சஜித் தெரிவிப்பு!

Tamil nila / Sep 14th 2024, 7:39 am
image

Advertisement

"நாட்டில் தற்போது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது. பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

"இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிசவாதத்துக்கும், வன்முறைக்கும், மிலேச்சத்தனத்துக்கும் மக்கள் ஆதரவு அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொதுமக்களின் யுகத்துக்காக எந்தச் சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்." - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் தெபரவெவ நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தற்போது நாட்டைத் தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள். ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவைக்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி விவசாயக் கடனை இரத்துச் செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும் இவர்கள் எதிராக இருக்கின்றனமையாலே தற்போது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை ரணிலும், அநுரவும் விரும்புகின்றார்கள். வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள்.

எனவே, இந்த ரணில் - அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வியடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய யுகத்துக்குப் பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்." - என்றார்.






மீண்டும் தலைதூக்குகின்றது வன்முறை- ரணில் - அநுர கூட்டைத் தோற்கடிக்க வேண்டும் - சஜித் தெரிவிப்பு "நாட்டில் தற்போது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது. பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்."இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிசவாதத்துக்கும், வன்முறைக்கும், மிலேச்சத்தனத்துக்கும் மக்கள் ஆதரவு அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொதுமக்களின் யுகத்துக்காக எந்தச் சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்." - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் தெபரவெவ நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"தற்போது நாட்டைத் தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள். ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவைக்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி விவசாயக் கடனை இரத்துச் செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும் இவர்கள் எதிராக இருக்கின்றனமையாலே தற்போது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை ரணிலும், அநுரவும் விரும்புகின்றார்கள். வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள்.எனவே, இந்த ரணில் - அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வியடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய யுகத்துக்குப் பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement