• Sep 27 2024

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு எச்சரிக்கை

Chithra / Sep 26th 2024, 5:45 pm
image

Advertisement


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப்பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் விமான நிலைய ஊழியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணப் பொதிகள் சேமிப்பு பிரிவில் பணிபுரியும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப்பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பெறுமதியான பொருட்கள் திருடப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நீண்ட நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு எச்சரிக்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப்பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் விமான நிலைய ஊழியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணப் பொதிகள் சேமிப்பு பிரிவில் பணிபுரியும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடையவர் ஆவார்.சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப்பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பெறுமதியான பொருட்கள் திருடப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நீண்ட நாட்களாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement