துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம் என மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
இன்று (26) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, அவர் மேற்படி தகவலை முன் வைத்தார்.
குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சருமான அருண் கேமசந்திரா தலைமையில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் வன இலாகாவினால் தடை செய்யப்பட்டுள்ள குளங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாஸன் கோரிக்கை விடுத்தபோதே போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இதில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மேற்படி துறைமுக அதிகார சபை 5200 ஏக்கருக்கும் அதிகமான மக்களின் காணிகளை மிக நீண்ட காலமாக வைத்திருக்கிறது. அதனை உடன் விடுவிக்க வேணடும் என பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அரசியல் விவாதங்களை நாம் செய்வதற்கு பாராளுமன்றம் இருக்கின்றது. எனவே இந்தக் கூட்டம் அபிவிருத்தி செய்வதற்கான மக்களினுடைய நலன் சார் விடயங்கள் இங்கு பேசப்பட வேண்டும்.
இந்த நிலையில் மக்களுடைய நலன்களை கூட்டாக பேசி, நாங்கள் மக்களுக்காக பணியாற்ற முன் வந்திருக்கின்றோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்- பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகிறோம் என மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.இன்று (26) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, அவர் மேற்படி தகவலை முன் வைத்தார். குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சருமான அருண் கேமசந்திரா தலைமையில் இடம்பெற்றது.திருகோணமலை மாவட்டத்தில் வன இலாகாவினால் தடை செய்யப்பட்டுள்ள குளங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாஸன் கோரிக்கை விடுத்தபோதே போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.இதில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மேற்படி துறைமுக அதிகார சபை 5200 ஏக்கருக்கும் அதிகமான மக்களின் காணிகளை மிக நீண்ட காலமாக வைத்திருக்கிறது. அதனை உடன் விடுவிக்க வேணடும் என பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார். அரசியல் விவாதங்களை நாம் செய்வதற்கு பாராளுமன்றம் இருக்கின்றது. எனவே இந்தக் கூட்டம் அபிவிருத்தி செய்வதற்கான மக்களினுடைய நலன் சார் விடயங்கள் இங்கு பேசப்பட வேண்டும். இந்த நிலையில் மக்களுடைய நலன்களை கூட்டாக பேசி, நாங்கள் மக்களுக்காக பணியாற்ற முன் வந்திருக்கின்றோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.