மார்ச் 25 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனையின்போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் மண்டைத்தீவு, வாழச்சேனை, சுண்டிக்குளம், நவற்காடு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மீன்பிடித்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட பல விடயங்களில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 45 சட்டவிரோத வலைகள், 50,005 கடலட்டைகள், 13 கொள்கலன்கள், வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மீன்வள ஆய்வு அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கடற்படையினரால் கைது மார்ச் 25 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சோதனையின்போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர்கள் மண்டைத்தீவு, வாழச்சேனை, சுண்டிக்குளம், நவற்காடு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கைதுசெய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மீன்பிடித்தல், வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட பல விடயங்களில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 45 சட்டவிரோத வலைகள், 50,005 கடலட்டைகள், 13 கொள்கலன்கள், வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்பிடி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை மீன்வள ஆய்வு அலுவலகங்களில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.