• Sep 20 2024

தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிநபருக்கு உரித்தாக விடமாட்டோம் - செல்வம் சூளுரை!

Tamil nila / Jan 14th 2023, 3:17 pm
image

Advertisement

தேர்தல் வெற்றியை நோக்காக கொண்டு தாய்க்கட்சியான தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியமையானது மனவருத்ததை தருவதாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


இன்று யாழில் பரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


கொள்கையுடன் செயற்படுவதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் இதற்குள்ள ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவும் சுழற்சி முறையிலான தலைவர்களை கொண்டதாகவும் ஒன்றுபட்டு இன்று தாங்கள் அணிதிரண்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் மக்களின் பலம் என்றும் மக்கள் ஒற்றுமையை ஆதரத்துள்ளதாகவும் 

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சியினுடைய அல்லது தனிநபருடைய சொத்தாகக்கூடாது என்பதே தமது நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிநபருக்கு உரித்தாக விடமாட்டோம் - செல்வம் சூளுரை தேர்தல் வெற்றியை நோக்காக கொண்டு தாய்க்கட்சியான தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியமையானது மனவருத்ததை தருவதாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இன்று யாழில் பரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.கொள்கையுடன் செயற்படுவதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் இதற்குள்ள ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகவும் சுழற்சி முறையிலான தலைவர்களை கொண்டதாகவும் ஒன்றுபட்டு இன்று தாங்கள் அணிதிரண்டுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலம் மக்களின் பலம் என்றும் மக்கள் ஒற்றுமையை ஆதரத்துள்ளதாகவும் எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சியினுடைய அல்லது தனிநபருடைய சொத்தாகக்கூடாது என்பதே தமது நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement