கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வுக்கு முன்னதாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்றையதினம்(02) கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ் தலைமையில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
37உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக 20உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 06உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 04உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 02உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 02உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக 01உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பாக 02உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வு சர்வமத வழிபாட்டுடன் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு வரவேற்பு. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வுக்கு முன்னதாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்றையதினம்(02) கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ் தலைமையில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.37உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக 20உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 06உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 04உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 02உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 02உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக 01உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பாக 02உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.இந்நிகழ்வு சர்வமத வழிபாட்டுடன் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.