• Sep 08 2024

எமக்கு எப்போது தொழில் ? மட்டக்களப்பில் பட்டதாரிகள் கொந்தளிப்பு...!

Anaath / Jul 13th 2024, 4:31 pm
image

Advertisement

தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் இன்றைய தினமும் தமது பிள்ளைகளுடன்  காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு  முன்பாக ஒன்றுகூடி கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன்போது, ஏனைய மாவட்டங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன்  தமது தொழில் நியமனத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்,கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா?, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

அத்துடன் வருடங்கள் போகபோக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

எமக்கு எப்போது தொழில் மட்டக்களப்பில் பட்டதாரிகள் கொந்தளிப்பு. தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் இன்றைய தினமும் தமது பிள்ளைகளுடன்  காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு  முன்பாக ஒன்றுகூடி கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.மேலும் இதன்போது, ஏனைய மாவட்டங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.அத்துடன்  தமது தொழில் நியமனத்தினை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.மேலும் பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்,கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.அத்துடன் வருடங்கள் போகபோக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement