• Apr 25 2026

கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே? கிளிநொச்சியில் வெடித்தது போராட்டம்...!samugammedia

Ziya / Dec 30th 2023, 11:42 am
image

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம்.

அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சில நாட்களில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாயார் ஒருவர் உயிரிழந்தார்.

எமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க பேச்சு மேற்கொள்ள முடியாது. அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சில நாட்களில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாயார் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், ஒரு தாயார் இருக்கும் வரை எமது தொடர் போராட்டம் தொடரும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே கிளிநொச்சியில் வெடித்தது போராட்டம்.samugammedia வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றது.இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.இதன்போது, எமது உறவுகள், காணி, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம்.அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சில நாட்களில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாயார் ஒருவர் உயிரிழந்தார்.எமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க பேச்சு மேற்கொள்ள முடியாது. அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சில நாட்களில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாயார் ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிலையில், ஒரு தாயார் இருக்கும் வரை எமது தொடர் போராட்டம் தொடரும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement