• Aug 31 2026

டுபாயில் ‘வெள்ளே சாரங்க’ கைது? – போதைப்பொருட்களும் மீட்பு

Aathira / Aug 30th 2026, 7:42 am
image

‘வெள்ளே சாரங்க’ என அழைக்கப்படும் சாரங்க பிரதீப் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன்னர் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகவும், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் டுபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து கொக்கெய்ன் மற்றும் ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கைது தொடர்பான தகவல் இதுவரை இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் தேசிய புலனாய்வுச் சேவை அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே டுபாய் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டுபாயில் ‘வெள்ளே சாரங்க’ கைது – போதைப்பொருட்களும் மீட்பு ‘வெள்ளே சாரங்க’ என அழைக்கப்படும் சாரங்க பிரதீப் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சில நாட்களுக்கு முன்னர் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகவும், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் டுபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து கொக்கெய்ன் மற்றும் ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கைது தொடர்பான தகவல் இதுவரை இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் தேசிய புலனாய்வுச் சேவை அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே டுபாய் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement