ஏர் இந்தியா விமான விபத்தில் கனவுகளுடன் பயணித்த அனைவரது வாழ்க்கையயும் ஒரு நொடியில் சிதறிப் போனது. அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியே ஏர் இந்தியா விமான விபத்தில் காதலியை இழந்த காதலனின் வலிகள்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் நிலைகுலையவைத்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பயணித்தவர்களின் கனவுகளை அவரவர்களின் உறவினர்களின் படங்கள், வீடியோக் காட்சிகள் மூலம் பதிவிட்டு தங்களது துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகவே லண்டனுக்கு சென்ற தனது காதலியை வழியனுப்பிவிட்டு இருந்த காதலனுக்கு கிடைத்த செய்தி புறப்பட்ட 32 வினாடிகளிலேயே ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் நொருங்கி விபத்துக்குள்ளாகியது என்பதுதான்.
இந்த அதிர்ச்சிச் சம்பவத்தைக் கேள்வியுற்ற அந்தக் காதலன் வைத்தியசாலையின் காத்திருப்பு அறைக்குள் அதிர்ச்சிக்குள்ளாகி நிலைகுலைந்து கண்ணீருடன் இருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய காதலியின் உடல் இதுவரை கொடுக்கப்படவில்லை.
அவரிடம் நெருங்கிய சிலர் அவர் பேசிய வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளனர். அதில்
காத்திருப்பு அறையில் அமைதியாக, உடைந்து போய் அவர் இருந்ததை நாங்கள் கண்டோம்.
அவரது கண்கள், வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு கதையைக் கூறின. ஒரு விரக்தியின் கதை. ஒரு கணம் அவர் நினைவுகளில் மூழ்குகிறார். அடுத்த கணம் அவர் உடைந்துபோய் அழுகிறார் என்றனர்.
ஏனென்றால் அவள் அவனுடைய உலகம், அவனுடைய காதலி, அவனுடைய துணை, அவனுடைய சிறந்த தோழி, அனைவரும் ஒரே ஆன்மாவாக இருந்துள்ளனர், கனவுகளைத் துறந்து சர்ய்தர்ப்ப சூழ்ந்நிலையால் காதலி லண்டனுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவள் வானலே சென்றுவிட்டாள் . இப்போது அவனிடம் அவளுடைய சிரிப்பின் எதிரொலிகள், அவர்கள் ஒன்றாகத் திட்டமிட்ட வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என தெரிவித்தனர்.
ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் சென்று , "நீங்கள் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள்?" என கேட்டுள்ளார். அப்போது அவரது குரல் உடைந்து, அப்போது “my love” எனக் கூறி கண்கள் முழுவதும் கண்ணீர்த் துளிகளுடன் அசைவற்றுப் போய் கதிகலங்கி தன் காதலியை நினைத்து உறைந்த அந்தக் காட்சிகள் அனைவரையும் மனமுருக வைத்துள்ளது.
யாருக்காக காத்திருக்கிறாய் “My Love”- விமான விபத்தில் காதலியை தொலைத்த: காதலனின் கடினமான ஒற்றை வார்த்தை ஏர் இந்தியா விமான விபத்தில் கனவுகளுடன் பயணித்த அனைவரது வாழ்க்கையயும் ஒரு நொடியில் சிதறிப் போனது. அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியே ஏர் இந்தியா விமான விபத்தில் காதலியை இழந்த காதலனின் வலிகள். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் நிலைகுலையவைத்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பயணித்தவர்களின் கனவுகளை அவரவர்களின் உறவினர்களின் படங்கள், வீடியோக் காட்சிகள் மூலம் பதிவிட்டு தங்களது துயரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே லண்டனுக்கு சென்ற தனது காதலியை வழியனுப்பிவிட்டு இருந்த காதலனுக்கு கிடைத்த செய்தி புறப்பட்ட 32 வினாடிகளிலேயே ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தில் நொருங்கி விபத்துக்குள்ளாகியது என்பதுதான். இந்த அதிர்ச்சிச் சம்பவத்தைக் கேள்வியுற்ற அந்தக் காதலன் வைத்தியசாலையின் காத்திருப்பு அறைக்குள் அதிர்ச்சிக்குள்ளாகி நிலைகுலைந்து கண்ணீருடன் இருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய காதலியின் உடல் இதுவரை கொடுக்கப்படவில்லை. அவரிடம் நெருங்கிய சிலர் அவர் பேசிய வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளனர். அதில் காத்திருப்பு அறையில் அமைதியாக, உடைந்து போய் அவர் இருந்ததை நாங்கள் கண்டோம்.அவரது கண்கள், வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு கதையைக் கூறின. ஒரு விரக்தியின் கதை. ஒரு கணம் அவர் நினைவுகளில் மூழ்குகிறார். அடுத்த கணம் அவர் உடைந்துபோய் அழுகிறார் என்றனர். ஏனென்றால் அவள் அவனுடைய உலகம், அவனுடைய காதலி, அவனுடைய துணை, அவனுடைய சிறந்த தோழி, அனைவரும் ஒரே ஆன்மாவாக இருந்துள்ளனர், கனவுகளைத் துறந்து சர்ய்தர்ப்ப சூழ்ந்நிலையால் காதலி லண்டனுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவள் வானலே சென்றுவிட்டாள் . இப்போது அவனிடம் அவளுடைய சிரிப்பின் எதிரொலிகள், அவர்கள் ஒன்றாகத் திட்டமிட்ட வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என தெரிவித்தனர். ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் சென்று , "நீங்கள் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள்" என கேட்டுள்ளார். அப்போது அவரது குரல் உடைந்து, அப்போது “my love” எனக் கூறி கண்கள் முழுவதும் கண்ணீர்த் துளிகளுடன் அசைவற்றுப் போய் கதிகலங்கி தன் காதலியை நினைத்து உறைந்த அந்தக் காட்சிகள் அனைவரையும் மனமுருக வைத்துள்ளது.