தமிழ்நாட்டிலுள்ள மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்குவதன் நோக்கம் என்ன அதன் வெளிப்படைத்தன்மையை உடனடியாக தமிழ்நாட்டு அரசு வெளிப்படுத்த வேண்டுமென அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருதலைப் பட்சமான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்.
முக.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கின்ற மீனவர்களும் இலங்கையின் வடபகுதியில் இருக்கின்ற மீனவர்களும் சமம் என கருதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
இந்தியாவில் மீனவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை உள்வாங்கி அவர்களுக்கு அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகின்றது.
இது எதற்கு என்று தெரியவில்லை. மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் போது மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள், மோதல்கள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
இந்திய மீனவர்களுக்கு எதற்கு தற்காப்பு பயிற்சி முக.ஸ்டாலின் பதில் கூறவேண்டும்- சுப்பிரமணியம் வேண்டுகோள் SamugamMedia தமிழ்நாட்டிலுள்ள மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்குவதன் நோக்கம் என்ன அதன் வெளிப்படைத்தன்மையை உடனடியாக தமிழ்நாட்டு அரசு வெளிப்படுத்த வேண்டுமென அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருதலைப் பட்சமான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். முக.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கின்ற மீனவர்களும் இலங்கையின் வடபகுதியில் இருக்கின்ற மீனவர்களும் சமம் என கருதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முன்வரவேண்டும்.இந்தியாவில் மீனவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை உள்வாங்கி அவர்களுக்கு அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகின்றது. இது எதற்கு என்று தெரியவில்லை. மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் போது மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள், மோதல்கள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.