• Nov 07 2025

வெளிநாட்டிலிருந்து திரும்பவிருந்த கணவனுக்கு 'ஷாக்' கொடுத்த மனைவி; பொலிஸாரையும் ஏமாற்றி அரங்கேற்றிய நாடகம்

Chithra / Oct 8th 2025, 9:09 pm
image


கணவரிடம் தப்பிப்பதற்கு நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொய் கூறியதுடன், பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. 

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி  அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீடான்றில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான   நகைககள்  களவாடப்பட்டுள்ளதாகவும் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு  திரும்பவுள்ள  நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய  குடும்பப்பெண் முறைப்பாட்டு செய்துள்ளார்.  

குறித்த முறைப்பாட்டிற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ்.  நிசாந்த வெதகே வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி   உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்களின் புலன் விசாரணைகள் துரித கதியில் மேற்கொண்டிருந்தன.

இதற்கமைய அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்பநாய் பிரிவு என்பன இச்சோதனையை மேற்கொண்டிருந்தன. 

இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டற்கான சான்றுகளோ அல்லது மேற்கூறப்பட்ட  45 இலட்சம் ரூபா நகைகள் திருடப்பட்டமைக்கான  எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த  பொலிஸார் அப்பெண்ணை கடந்த  3 ஆம் திகதி  துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதன்போது பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.

இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற நிலையில் தனியாக  இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த   குறித்த பெண் தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக  செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் கணவன் திடீரென  நாடு திரும்பவுள்ளதாக  அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சற்று பதற்றமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபா பெறுமதியான  நகைககள்  களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடியுள்ளார்.  

மேலும் கல்முனை பகுதியில் உள்ள பிரபல நகையகத்திற்கு சென்று  நகைகளை விற்பனை செய்ததை  ஒப்புக்கொண்டுள்ளார். 

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அப்பெண், கைது செய்யப்பட்டு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.

பின்னர் சந்தேகநபரான குறித்த பெண் சார்பில் இடைமனுக் கோரிக்கை  முன்வைக்கப்பட்டது. இதன்போது  அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கடும் தொனியில் சந்தேக  நபரை எச்சரித்த நீதிபதி  பிணையில் செல்ல  உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிலிருந்து திரும்பவிருந்த கணவனுக்கு 'ஷாக்' கொடுத்த மனைவி; பொலிஸாரையும் ஏமாற்றி அரங்கேற்றிய நாடகம் கணவரிடம் தப்பிப்பதற்கு நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொய் கூறியதுடன், பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி  அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீடான்றில் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான   நகைககள்  களவாடப்பட்டுள்ளதாகவும் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு  திரும்பவுள்ள  நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய  குடும்பப்பெண் முறைப்பாட்டு செய்துள்ளார்.  குறித்த முறைப்பாட்டிற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ்.  நிசாந்த வெதகே வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி   உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்களின் புலன் விசாரணைகள் துரித கதியில் மேற்கொண்டிருந்தன.இதற்கமைய அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்பநாய் பிரிவு என்பன இச்சோதனையை மேற்கொண்டிருந்தன. இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டற்கான சான்றுகளோ அல்லது மேற்கூறப்பட்ட  45 இலட்சம் ரூபா நகைகள் திருடப்பட்டமைக்கான  எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.இந்நிலையில் குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த  பொலிஸார் அப்பெண்ணை கடந்த  3 ஆம் திகதி  துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதன்போது பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்ற நிலையில் தனியாக  இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த   குறித்த பெண் தனது கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக  செலவு செய்துள்ளார்.இந்நிலையில் கணவன் திடீரென  நாடு திரும்பவுள்ளதாக  அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.இதனால் சற்று பதற்றமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபா பெறுமதியான  நகைககள்  களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடியுள்ளார்.  மேலும் கல்முனை பகுதியில் உள்ள பிரபல நகையகத்திற்கு சென்று  நகைகளை விற்பனை செய்ததை  ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட அப்பெண், கைது செய்யப்பட்டு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.பின்னர் சந்தேகநபரான குறித்த பெண் சார்பில் இடைமனுக் கோரிக்கை  முன்வைக்கப்பட்டது. இதன்போது  அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், கடும் தொனியில் சந்தேக  நபரை எச்சரித்த நீதிபதி  பிணையில் செல்ல  உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement