• Sep 17 2024

கல்முனையில் அட்டகாசம் புரியும் காட்டு யானைகள்..!

Sharmi / Sep 7th 2024, 6:02 pm
image

Advertisement

கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்றையதினம்(7) அதிகாலை கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக உள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் பெரிய நீலாவனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான செல்லையா வேலாயுதம் என்பவரே உயிரிழந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் தனியன் யானை உட்பட பல யானைகள் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன.

மேலும், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக  சடலத்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் பூரண விசாரணையின் பின்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பயிர்களையும்,வீடுகளையும்  காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்

இப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் காட்டு யானை தாக்கி பலியான மூன்றாவது சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



கல்முனையில் அட்டகாசம் புரியும் காட்டு யானைகள். கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்றையதினம்(7) அதிகாலை கல்முனை புதிய பஸ் தரிப்பிடத்திற்கு பின்புறமாக உள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் பெரிய நீலாவனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான செல்லையா வேலாயுதம் என்பவரே உயிரிழந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் தனியன் யானை உட்பட பல யானைகள் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன.மேலும், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக  சடலத்தை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் பூரண விசாரணையின் பின்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக பயிர்களையும்,வீடுகளையும்  காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்இப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் காட்டு யானை தாக்கி பலியான மூன்றாவது சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement