• Apr 16 2026

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி நிறுத்தம் - மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படுமா?

Chithra / Jun 13th 2025, 12:03 pm
image



நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று நள்ளிரவு (13) முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது.

இந்த பழுதுபார்க்கும் பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு 300 மெகாவாட் திறனை இழக்கும்.

எனினும், இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் இருப்பதால், மின்சார விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படாது என்று மின்சார சபையின்  ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதல் மின் பிறப்பாக்கி இயந்திரம் பழுதுபார்ப்பதற்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி நிறுத்தம் - மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படுமா நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று நள்ளிரவு (13) முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது.இந்த பழுதுபார்க்கும் பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு 300 மெகாவாட் திறனை இழக்கும்.எனினும், இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் இருப்பதால், மின்சார விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படாது என்று மின்சார சபையின்  ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதல் மின் பிறப்பாக்கி இயந்திரம் பழுதுபார்ப்பதற்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement