• Sep 20 2024

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 10:41 am
image

Advertisement

மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலிய காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தை பார்வையிட்ட பிறகு அட்டன் மாவட்ட நீதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு அட்டன் மாவட்ட பதில் நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பிறகு சடலம் நேற்று மு.ப பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய தனலெட்சுமி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சவச்சாலையில் வைக்க பட்டு உள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு samugammedia மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளது.மஸ்கெலிய காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவத்தை பார்வையிட்ட பிறகு அட்டன் மாவட்ட நீதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு அட்டன் மாவட்ட பதில் நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பிறகு சடலம் நேற்று மு.ப பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய தனலெட்சுமி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சவச்சாலையில் வைக்க பட்டு உள்ளது.சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement