• May 02 2024

உலகின் மிகவும் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள்- இரண்டு மாதம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்..!!

Tamil nila / Mar 8th 2024, 9:39 am
image

Advertisement

பத்து மாதங்களில், தாயின் கருவில் இருந்து வெளியே வர வேண்டிய குழந்தைகள், ஆறு மாதங்களிலேயே சுகப்பிரசவத்தில் வெளியே வந்தனர்.

இரட்டை பெண் குழந்தைகளுக்கு, இரண்டரை மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

இந்தியாவின் பெலகாவி மாவட்டம், சிக்கோடியை சேர்ந்த வங்கி ஊழியர் சித்தப்பா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

அப்போது குழந்தைகளின் எடை 830, 890 கிராம் ஆக இருந்தது. உடல் எடை குறைவாக இருந்ததால், சிக்கோடியில் உள்ள திவ்யம் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தைகள் நல டாக்டர் அமித் மகதும் இரண்டு மாதங்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து, இரு குழந்தைகளையும் குணப்படுத்தினார்.

தற்போது குழந்தைகள் 1,600, 1,580 கிலோ எடையில், உடல் நிலை சீராக உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் குழந்தைகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

உலகின் மிகவும் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள்- இரண்டு மாதம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள். பத்து மாதங்களில், தாயின் கருவில் இருந்து வெளியே வர வேண்டிய குழந்தைகள், ஆறு மாதங்களிலேயே சுகப்பிரசவத்தில் வெளியே வந்தனர்.இரட்டை பெண் குழந்தைகளுக்கு, இரண்டரை மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.இந்தியாவின் பெலகாவி மாவட்டம், சிக்கோடியை சேர்ந்த வங்கி ஊழியர் சித்தப்பா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.அப்போது குழந்தைகளின் எடை 830, 890 கிராம் ஆக இருந்தது. உடல் எடை குறைவாக இருந்ததால், சிக்கோடியில் உள்ள திவ்யம் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குழந்தைகள் நல டாக்டர் அமித் மகதும் இரண்டு மாதங்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து, இரு குழந்தைகளையும் குணப்படுத்தினார்.தற்போது குழந்தைகள் 1,600, 1,580 கிலோ எடையில், உடல் நிலை சீராக உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் குழந்தைகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement