• Sep 20 2024

விடுதி அறையொன்றில் முக்கிய பொருளுடன் சிக்கிய இளம் ஜோடி!

Chithra / Sep 19th 2024, 2:46 pm
image

Advertisement


பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த இளம் ஜோடி இன்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் 26 கிராம் 250 மில்லி கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும்,

யுவதியிடம் 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பகஸ்பிட்டிய, கந்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 

சந்தேகநபர் ஹிரியால பொலிஸாரினால் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். 

அவிசாவளை மீகஹா கொடல்ல பிரதேசத்தைச் 22 வயதுடைய யுவதியே மற்றுமொரு சந்தேக நபரேன தெரிவித்துள்ளனர்.

விடுதி அறையொன்றில் முக்கிய பொருளுடன் சிக்கிய இளம் ஜோடி பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த இளம் ஜோடி இன்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் 26 கிராம் 250 மில்லி கிராம் போதைப்பொருள் இருந்ததாகவும்,யுவதியிடம் 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அம்பகஸ்பிட்டிய, கந்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஹிரியால பொலிஸாரினால் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவிசாவளை மீகஹா கொடல்ல பிரதேசத்தைச் 22 வயதுடைய யுவதியே மற்றுமொரு சந்தேக நபரேன தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement