• May 18 2024

உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு - திருகோணமலையில் சோகம்..!!

Tamil nila / Mar 24th 2024, 7:27 am
image

Advertisement

உறங்கிக் கொண்டிருந்த இளைஞன்  மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  நண்பர்களுடன் பாட்டி ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு வந்து தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாதோரினால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த இந்த தாக்குதல் சம்பவத்தில்  திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) இளைஞரே  காயம் அடைந்துள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாகவும் இதனையடுத்து 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு - திருகோணமலையில் சோகம். உறங்கிக் கொண்டிருந்த இளைஞன்  மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  நண்பர்களுடன் பாட்டி ஒன்றிற்கு சென்று வீட்டுக்கு வந்து தனிமையாக உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாதோரினால் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.குறித்த இந்த தாக்குதல் சம்பவத்தில்  திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த கே.ஜே.எஸ்.பிரசன்ன குமார (27வயது) இளைஞரே  காயம் அடைந்துள்ளார்.உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் வெட்டிய நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் சகோதரிக்கு தெரியப்படுத்தியதாகவும் இதனையடுத்து 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.மேலும் தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement