• Aug 07 2026

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

Chithra / Aug 6th 2026, 10:11 am
image


திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (05) இரவு கிண்ணியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 357 கிராம் 830 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, அல் அக்ஸா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிண்ணியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (05) இரவு கிண்ணியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 357 கிராம் 830 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, அல் அக்ஸா வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிண்ணியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement