• May 06 2024

யாழில் கடற்றொழிலுக்குச் சென்ற இளைஞன் மாயம்..!

Chithra / Jan 29th 2024, 3:02 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

குறித்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

இவர் மேலும் இருவருடன் குருநகரிலிருந்து படகில் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்.  படகில் தங்கி தொழிலில் ஈடுபட்ட நிலையில், இரவு மூவரும் படகினுள் நித்திரைக்குச் சென்றுள்ளனர். 

காலையில் எழுந்து பார்த்தபோது அதில் இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

அதனையடுத்து, இருவரும் கடலில் தேடி இளைஞரை காணாத நிலையில், கரை திரும்பி ஏனைய கடற்தொழிலாளர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

பின்னர், மேலதிக படகுகளுடன் கடற்தொழிலாளர்கள் கடலில் சென்று தேடியும், இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இளைஞர் காணாமல்போன விடயம் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்துறை, பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழில் கடற்றொழிலுக்குச் சென்ற இளைஞன் மாயம்.  யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஜோசப் மக்சிமஸ் சுரேஷ்குமார் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் மேலும் இருவருடன் குருநகரிலிருந்து படகில் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்.  படகில் தங்கி தொழிலில் ஈடுபட்ட நிலையில், இரவு மூவரும் படகினுள் நித்திரைக்குச் சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது அதில் இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதனையடுத்து, இருவரும் கடலில் தேடி இளைஞரை காணாத நிலையில், கரை திரும்பி ஏனைய கடற்தொழிலாளர்களுக்கும் அறிவித்துள்ளனர்.பின்னர், மேலதிக படகுகளுடன் கடற்தொழிலாளர்கள் கடலில் சென்று தேடியும், இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை.இளைஞர் காணாமல்போன விடயம் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்துறை, பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement