உத்தரகாண்ட் மாநில சாமோலி மாவட்டத்தில் மின்மாற்றி வெடித்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் உள்ள மின்மாற்றி ஒன்றே இன்று (19) வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.