• Sep 20 2024

12 வயது சிறுமியை சீரழித்த நான்கு இளைஞர்கள்! வெலிகம பகுதியில் பதற்றம் SamugamMedia

Chithra / Feb 16th 2023, 3:57 pm
image

Advertisement

மாத்தறை – வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (16) பிற்பகல் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இதில் தொடர்பில்லை என தெரிவித்ததில் இவ்வாறு அங்கு பதற்றமான நிலை உருவானது.

அண்மையில் குறித்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நான்கு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி நேற்று மாலை தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திரண்டதுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் இது தொடர்பான சம்பவத்தில் தொடர்பில்லை எனத் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

12 வயது சிறுமியை சீரழித்த நான்கு இளைஞர்கள் வெலிகம பகுதியில் பதற்றம் SamugamMedia மாத்தறை – வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (16) பிற்பகல் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு இதில் தொடர்பில்லை என தெரிவித்ததில் இவ்வாறு அங்கு பதற்றமான நிலை உருவானது.அண்மையில் குறித்த சிறுமி மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது நான்கு இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதன்படி நேற்று மாலை தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கைது செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திரண்டதுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவருக்கும் இது தொடர்பான சம்பவத்தில் தொடர்பில்லை எனத் தெரிவித்தனர்.குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement