டுபாய் நாட்டில் இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் உரகஹா மைக்கல் என்பவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.