• Feb 10 2025

கிளிநொச்சியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது

Thansita / Feb 9th 2025, 10:38 pm
image

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்ப்பகுதியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

இன்று அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர் 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் இன்றைய தினம்  மாலை  கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து  குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து இன்று இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்ப்பகுதியில் இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இன்று அதிகாலை இரணைதீவிற்கு அன்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர் இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் இன்றைய தினம்  மாலை  கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து  குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து இன்று இரவு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement