• May 17 2024

கடலில் நீராடிக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாயம்..! தேடும் பணியில் பொலிஸார்

Chithra / Dec 14th 2023, 3:30 pm
image

Advertisement



பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிக் கொண்டிருந்த  சிறுவன்   காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போன சிறுவன் கம்பஹா -  கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவராவார். 

குறித்த சிறுவன் கணேமுல்ல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் சில தேரர்கள் மற்றும் மேலும் சில நபர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே காணாமல் போயுள்ளார்.

சிறுவன்   காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, சிறுவனை தேடும் பணியில் பொலிஸ் கடல் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாணம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் நீராடிக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாயம். தேடும் பணியில் பொலிஸார் பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிக் கொண்டிருந்த  சிறுவன்   காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு காணாமல்போன சிறுவன் கம்பஹா -  கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவராவார். குறித்த சிறுவன் கணேமுல்ல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் சில தேரர்கள் மற்றும் மேலும் சில நபர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே காணாமல் போயுள்ளார்.சிறுவன்   காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, சிறுவனை தேடும் பணியில் பொலிஸ் கடல் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில் பாணம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement