16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த 2009 செப்டம்பர் 13 ஆம் திகதி அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் அந்தரங்க பாகங்களை பாலியல் ரீதியாகத் தொட தனது உடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இதன் மூலம் தண்டனைச் சட்டத்தின் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.
சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் ஷைனி வீரசூரிய, குற்றம் சாட்டப்பட்டவர், சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்து, ஒரு குழந்தைக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்ய தனது அதிகாரபூர்வ பதவியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பொலிஸ்பிரிவு அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீறுவதாகவும், சட்ட அமுலாக்க அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சமூக நீதியை கடுமையாக மீறுவதாகவும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால், 1995 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரவித்தது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலதிகமாக 25,000 ரூபா அபராதம் விதித்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 400,000 ரூபா வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
16 வயது சிறுமி துஷ்பிரயோகம்பொலிஸ் அதிகாரிக்கு 14 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். கடந்த 2009 செப்டம்பர் 13 ஆம் திகதி அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் அந்தரங்க பாகங்களை பாலியல் ரீதியாகத் தொட தனது உடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இதன் மூலம் தண்டனைச் சட்டத்தின் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் ஷைனி வீரசூரிய, குற்றம் சாட்டப்பட்டவர், சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்து, ஒரு குழந்தைக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்ய தனது அதிகாரபூர்வ பதவியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பொலிஸ்பிரிவு அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை மீறுவதாகவும், சட்ட அமுலாக்க அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சமூக நீதியை கடுமையாக மீறுவதாகவும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால், 1995 ஆம் ஆண்டு திருத்தம் மூலம் இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரவித்தது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலதிகமாக 25,000 ரூபா அபராதம் விதித்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 400,000 ரூபா வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.