• Oct 19 2024

பொதுத் தேர்தல் தொடர்பில் 24 மணி நேரத்தில் 290 முறைப்பாடுகள் பதிவு!

Chithra / Oct 18th 2024, 1:44 pm
image

Advertisement

 

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை வேட்பு மனுத் தாக்கல் செய்த ஓரிரு நாட்களில் அதிகரித்து வருகின்றது.

அதனடிப்படையில் இதுவரை 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 211 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 79 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


பொதுத் தேர்தல் தொடர்பில் 24 மணி நேரத்தில் 290 முறைப்பாடுகள் பதிவு  எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை வேட்பு மனுத் தாக்கல் செய்த ஓரிரு நாட்களில் அதிகரித்து வருகின்றது.அதனடிப்படையில் இதுவரை 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளது.அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 211 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 79 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement