• Nov 13 2025

வட-கிழக்கு பனை அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

shanuja / Nov 9th 2025, 9:32 pm
image

வரலாற்று காலம் தொட்டு தமிழர்களினை் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்ததாகக் காணப்பட்டு வரும் ஓர் அம்சமே பனைசார் உற்பத்திகள். ஆகவே தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபா  நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம்  அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.


பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும், இன்று (09) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்  தலைமையில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திராவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.


இந்த நிகழ்வில், பனை சார் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பிரதி அமைச்சரினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் 'கற்பகம்' என்ற பெயரில் பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.


மேலும் பெறுமதி வாய்ந்த பனை உற்பத்தி பொருட்களுக்கான உபகரணங்களும் பிரதி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.


குறித்த  நிகழ்வில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன், பிரதி அமைச்சர்களின் செயலாளர்கள், பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வட-கிழக்கு பனை அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வரலாற்று காலம் தொட்டு தமிழர்களினை் கலாச்சாரங்களுடன் பின்னிப்பிணைந்ததாகக் காணப்பட்டு வரும் ஓர் அம்சமே பனைசார் உற்பத்திகள். ஆகவே தான் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபா  நிதியை வரவு செலவு திட்டத்தின் மூலம்  அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.பனைசார் கைப்பணி பயிற்சியாளர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும், இன்று (09) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின்  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்  தலைமையில், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திராவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.இந்த நிகழ்வில், பனை சார் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பிரதி அமைச்சரினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதோடு, திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் 'கற்பகம்' என்ற பெயரில் பனை சார் உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.மேலும் பெறுமதி வாய்ந்த பனை உற்பத்தி பொருட்களுக்கான உபகரணங்களும் பிரதி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.குறித்த  நிகழ்வில், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணன், பிரதி அமைச்சர்களின் செயலாளர்கள், பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement