குருணாகல் - மஹவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹாவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருணாகல் - அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்த 4 வயதுடைய சிறுவனாவார்.
இவர் தனது சகோதரனால் யானைகளுக்காக வயலில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட குற்றத்திற்காக பெண் மற்றும் ஆண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.