• Sep 08 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 45,000 பேர் பாதிப்பு...! 7 மரணங்கள் பதிவு...!

Sharmi / May 28th 2024, 6:39 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12,224 குடும்பங்களை சேர்ந்த 45,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(28) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா, புத்தளம் , இரத்தினபுரி ,கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கனமழை, மின்னல்,திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக கம்பஹா  மாவட்டத்தில்  6,212  குடும்பங்களை சேர்ந்த 25,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு முற்றாக  சேதமடைந்துள்ளது.  அத்துடன் 491 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 4 குடும்பங்கள் உட்பட 20 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

இதேவேளை களுத்துறை  மாவட்டத்தில் 909 குடும்பங்கள்  உட்பட 3284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 822 பகுதியளவு சேதமடைந்துள்ளன.

கொழும்பில் 22 குடும்பங்கள் உட்பட 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 238 குடும்பங்கள் உட்பட 925 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில்  1293  குடும்பங்களை சேர்ந்த 4285 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3   உயிரிழந்துள்ளனர். அத்துடன்  ஐவர்  காயமடைந்துள்ளனர். மேலும்  115 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 60 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில்108 குடும்பங்கள்  உட்பட 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 37 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1963 பேர் உட்பட 6,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 4பேர்  காயமடைந்துள்ளனர். அத்துடன்4 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  1941 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

காலி மாவட்டத்தில் 1239 குடும்பங்கள் உட்பட 3,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1,235வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 577குடும்பங்களை சேர்ந்த 2135 பேர் பாதிக்கப்பட்டுள்ளநர் . அத்துடன் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  560 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்167 குடும்பங்களை சேர்ந்த  613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 4 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 156 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.

வடமாகாணத்தில் 447 குடும்பங்களை சேர்ந்துள்ள 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 437 குடும்பங்களை சேர்ந்துள்ள 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

சப்பிரகமுவ மாகாணத்தில் 266 குடும்பங்களை சேர்ந்துள்ள 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 9 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்891 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 671குடும்பங்களை சேர்ந்த 2520 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் 5 வீடுகள் முழுமையாகவும் 631 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 266 குடும்பங்களை சேர்ந்த 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன  அத்துடன் 260 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  4 குடும்பங்களை    சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 121 குடும்பங்களை சேர்ந்துள்ள  455 பேர் பலத்த காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 117 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நுவரெலியாவில் 86 குடும்பங்களை சேர்ந்துள்ள  342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 84 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை வட மத்திய மாகாணத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 263 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்துள்ள 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 45,000 பேர் பாதிப்பு. 7 மரணங்கள் பதிவு. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12,224 குடும்பங்களை சேர்ந்த 45,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(28) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நுவரெலியா, புத்தளம் , இரத்தினபுரி ,கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், கனமழை, மின்னல்,திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.குறிப்பாக கம்பஹா  மாவட்டத்தில்  6,212  குடும்பங்களை சேர்ந்த 25,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு முற்றாக  சேதமடைந்துள்ளது.  அத்துடன் 491 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 4 குடும்பங்கள் உட்பட 20 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இதேவேளை களுத்துறை  மாவட்டத்தில் 909 குடும்பங்கள்  உட்பட 3284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 822 பகுதியளவு சேதமடைந்துள்ளன.கொழும்பில் 22 குடும்பங்கள் உட்பட 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 238 குடும்பங்கள் உட்பட 925 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தில்  1293  குடும்பங்களை சேர்ந்த 4285 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3   உயிரிழந்துள்ளனர். அத்துடன்  ஐவர்  காயமடைந்துள்ளனர். மேலும்  115 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 60 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை குருநாகல் மாவட்டத்தில்108 குடும்பங்கள்  உட்பட 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 37 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 1963 பேர் உட்பட 6,403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 4பேர்  காயமடைந்துள்ளனர். அத்துடன்4 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  1941 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.காலி மாவட்டத்தில் 1239 குடும்பங்கள் உட்பட 3,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1,235வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.மாத்தறை மாவட்டத்தில் 577குடும்பங்களை சேர்ந்த 2135 பேர் பாதிக்கப்பட்டுள்ளநர் . அத்துடன் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  560 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்167 குடும்பங்களை சேர்ந்த  613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 4 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 156 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.வடமாகாணத்தில் 447 குடும்பங்களை சேர்ந்துள்ள 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.கிளிநொச்சி மாவட்டத்தில் 437 குடும்பங்களை சேர்ந்துள்ள 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனமுல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சப்பிரகமுவ மாகாணத்தில் 266 குடும்பங்களை சேர்ந்துள்ள 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 9 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்891 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 671குடும்பங்களை சேர்ந்த 2520 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் 5 வீடுகள் முழுமையாகவும் 631 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.கேகாலை மாவட்டத்தில் 266 குடும்பங்களை சேர்ந்த 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன  அத்துடன் 260 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  4 குடும்பங்களை    சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 121 குடும்பங்களை சேர்ந்துள்ள  455 பேர் பலத்த காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 117 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.நுவரெலியாவில் 86 குடும்பங்களை சேர்ந்துள்ள  342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 84 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இதேவேளை வட மத்திய மாகாணத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 263 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்துள்ள 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement