அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள 47 கெமராக்களும் செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் அனுராதபுரம், ஹபரணை மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களின் பாதுகாப்பிற்காக 7 மில்லியன் ரூபா செலவில் CCTV அமைப்புகளை நிறுவ வடமத்திய மாகாணசபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து அங்கு 47 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் எதுவும் தற்போது செயல்படவில்லை எனவும், CCTV அமைப்பை நிறுவிய தனியார் நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் ஏப்ரல் 2024ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தமையே இதற்கு காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , CCTV கெமரா அமைப்பின் செயலிழப்பானது அனுராதபுரம் நகரின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரத்தில் பொருத்தப்பட்ட 47 CCTV கெமராக்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள 47 கெமராக்களும் செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2017 ஆம் ஆண்டில் அனுராதபுரம், ஹபரணை மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களின் பாதுகாப்பிற்காக 7 மில்லியன் ரூபா செலவில் CCTV அமைப்புகளை நிறுவ வடமத்திய மாகாணசபை நடவடிக்கை எடுத்திருந்தது.இதனையடுத்து அங்கு 47 கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் எதுவும் தற்போது செயல்படவில்லை எனவும், CCTV அமைப்பை நிறுவிய தனியார் நிறுவனத்துடனான சேவை ஒப்பந்தம் ஏப்ரல் 2024ஆம் ஆண்டுடன் நிறைவடைந்தமையே இதற்கு காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் , CCTV கெமரா அமைப்பின் செயலிழப்பானது அனுராதபுரம் நகரின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.