• May 10 2024

விடத்தல்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது...!samugammedia

Sharmi / Jan 30th 2024, 2:16 pm
image

Advertisement

மாந்தை மேற்கு பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில்  தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு  அவர்கள் பயன்படுத்திய இழுவை படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் எருக்கலம்பிட்டி மற்றும்  உப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களால் நேற்றையதினம்(29) இரவு குறித்த மீனவர்கள் கடலில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விடத்தல் தீவு இறங்கு துறையில் இழுவை படகு நிறுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைக்காக  5 மீனவர்களும் , வலைகளும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்  விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விடத்தல்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது.samugammedia மாந்தை மேற்கு பிரதேச  செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில்  தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு  அவர்கள் பயன்படுத்திய இழுவை படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் எருக்கலம்பிட்டி மற்றும்  உப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்களால் நேற்றையதினம்(29) இரவு குறித்த மீனவர்கள் கடலில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் விடத்தல் தீவு இறங்கு துறையில் இழுவை படகு நிறுத்தப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைக்காக  5 மீனவர்களும் , வலைகளும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்  விசாரணைகளின் பின்னர் மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement