• Feb 05 2025

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Tamil nila / Dec 8th 2024, 8:58 pm
image

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நேற்று சனிக்கிழமை இந்திய மீனவர்கள் 8 பேரைக் கைது செய்ததுடன்,  இரண்டு படகுகளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் சாலினி ஜெயபாலச்சந்திரன் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோது, 8 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.


நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நேற்று சனிக்கிழமை இந்திய மீனவர்கள் 8 பேரைக் கைது செய்ததுடன்,  இரண்டு படகுகளையும் கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட மீனவர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் சாலினி ஜெயபாலச்சந்திரன் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோது, 8 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement