• Sep 20 2024

மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று 16 வயது மாணவி துஷ்பிரயோகம்; சிக்கிய 19 வயது காதலன்

Chithra / Aug 16th 2024, 3:44 pm
image

Advertisement

 மொனராகலை - கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 19 வயது காதலன் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.

கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலனே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த மாணவி கைது செய்யப்பட்ட  சந்தேக நபருடன் நீண்ட காலமாகக் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், சந்தேக நபரான காதலன் இந்த மாணவியைக் கதிர்காமம்,  தெடகமுவ பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் பாடசாலையின் பெண் அதிபருக்குத் தெரியவந்துள்ள நிலையில், பாடசாலையின் பெண் அதிபர் இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து,  சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று 16 வயது மாணவி துஷ்பிரயோகம்; சிக்கிய 19 வயது காதலன்  மொனராகலை - கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 19 வயது காதலன் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார்.கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய காதலனே கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,இந்த மாணவி கைது செய்யப்பட்ட  சந்தேக நபருடன் நீண்ட காலமாகக் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சந்தேக நபரான காதலன் இந்த மாணவியைக் கதிர்காமம்,  தெடகமுவ பிரதேசத்தில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் பாடசாலையின் பெண் அதிபருக்குத் தெரியவந்துள்ள நிலையில், பாடசாலையின் பெண் அதிபர் இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இதனையடுத்து,  சந்தேக நபரான காதலன் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement