• Sep 20 2024

மாணவி போன்று வேடமணிந்து பள்ளி கழிவறையில் பதுங்கியிருந்த 40 வயது நபர்! samugammedia

Tamil nila / Apr 21st 2023, 9:08 pm
image

Advertisement

பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளியில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார்.

ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கழிவறைக்குள் சென்ற மாணவிகளில் ஒருவர், உள்ளே மாணவிகள் போன்றே சீருடை, இரட்டை ஜடை மற்றும் மாஸ்க் அணிந்த நபர், கழிவறையில் இருந்ததைக் கண்டு அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளார்.

இதன்போது பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர்.

தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர், அந்த நபரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர்.

இந்நிலையில் பிடிபட்ட நபரின் தொலைபேசியை ஆராய்ந்த போது, வேறு சில பள்ளிகளிலும் சீருடை அணிந்து இதே பாணியில் சுற்றித் திரிந்த புகைப்படங்கள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


மாணவி போன்று வேடமணிந்து பள்ளி கழிவறையில் பதுங்கியிருந்த 40 வயது நபர் samugammedia பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளியில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார்.ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கழிவறைக்குள் சென்ற மாணவிகளில் ஒருவர், உள்ளே மாணவிகள் போன்றே சீருடை, இரட்டை ஜடை மற்றும் மாஸ்க் அணிந்த நபர், கழிவறையில் இருந்ததைக் கண்டு அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளார்.இதன்போது பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர்.தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர், அந்த நபரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர்.இந்நிலையில் பிடிபட்ட நபரின் தொலைபேசியை ஆராய்ந்த போது, வேறு சில பள்ளிகளிலும் சீருடை அணிந்து இதே பாணியில் சுற்றித் திரிந்த புகைப்படங்கள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement