• Apr 15 2026

யாழில் சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்; வீடியோ எடுத்தவர் அதிரடிக் கைது!

Chithra / Apr 9th 2026, 7:22 pm
image

யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவனின் ஆடைகளை களைந்து, அவன்மீது தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர். 

 

குறித்த சிறுவனின் அண்ணாவை பழிவாங்கும் முகமாகவே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


இதேவேளை மற்றைய சந்தேகநபரை தேடும் பணிகளில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் சிறுவனின் ஆடைகளை களைந்து தாக்குதல்; வீடியோ எடுத்தவர் அதிரடிக் கைது யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவனின் ஆடைகளை களைந்து, அவன்மீது தாக்குதல் நடாத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து வேறு நபர்களுக்கு அனுப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இச் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.  குறித்த சிறுவனின் அண்ணாவை பழிவாங்கும் முகமாகவே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.இதேவேளை மற்றைய சந்தேகநபரை தேடும் பணிகளில் சுன்னாகம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement