தற்போது கஞ்சாவால் செய்யப்பட்ட பற்பசையை பல் துலக்க பயன்படுத்துவதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கஞ்சா பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பழம்தரும் பயிர் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் கஞ்சாவை பானமாக பயன்படுத்த தாம் ஒருபோதும் முன்மொழியவில்லை எனவும் அதனை ஏற்றுமதி பயிராக வளர்த்து நாட்டிற்குள் டொலர்களை கொண்டு வருவதற்கான ஒரு வழியாக அதைப் பயன்படுத்துமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.