தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தியாகி சாந்தனுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.
மன்னாரில் அமைந்துள்ள தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று(04) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள்,முன்னாள் நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சாந்தனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.