• Apr 27 2026

யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

Chithra / Apr 26th 2026, 8:07 am
image

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குருநகர் பகுதியில் வைத்து இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்படும்போது இவரிடம் 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.


யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியில் வைத்து இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்படும்போது இவரிடம் 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement