• Oct 19 2024

சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த நபர் அதிரடி சுற்றிவளைப்பில் கைது!

Chithra / Oct 18th 2024, 11:34 am
image

Advertisement

 

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக  நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த  48 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1,225 லீற்றர் டீசல் மற்றும் பல்வேறு உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த நபர் அதிரடி சுற்றிவளைப்பில் கைது  அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக  நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கலென்பிந்துனுவெவ, மொரகொட மீகஸ்வெவ பிரதேசத்தில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த  48 வயதுடையவர் ஆவார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1,225 லீற்றர் டீசல் மற்றும் பல்வேறு உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொரகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement