• May 07 2024

சாய்ந்தமருது மதரஸாவில் உயிரிழந்த முஸ்லீம் மாணவன்...! கைதான மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல்...!samugammedia

Sharmi / Jan 19th 2024, 10:42 am
image

Advertisement

சாய்ந்தமருது பகுதியில் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை  எதிர்வரும் பெப்ரவரி  மாதம்  01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு  நேற்றையதினம் (18)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்  பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதன் போது பாதிக்கபட்ட சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுள் உலமா சபையின் சார்பில்  சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில்  ஆஜராகி இருந்தார்.

குறித்த வழக்கினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய   நீதிமன்ற உத்தியோகத்தர் முபாறக் நெறிப்படுத்தி இருந்தார்.

இதன் போது சம்பவ தினமன்று மத்ரஸாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் சேமிக்கப்பட்டிருந்த  காணொளிகள் சந்தேக நபரான மௌலவியின் உத்தரவின் பேரில்  அழிக்கப்பட்ட நிலையில்  கடந்த நீதிமன்ற தவணைகளில் பொலிஸாரினால் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதற்கமைய நீதிவான் அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி அழிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு  உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கமைய,  அழிக்கப்பட்ட காணொளிகள் மீட்கப்பட்டுள்ளதாக  மன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய சமர்ப்பணங்களை பொலிஸார் மன்றில்  சமர்ப்பித்து குறித்த சிசிடிவி காணொளி  அறிக்கையை  மன்றிற்கு பாரப்படுத்துமாறு  கட்டளை பிறப்பித்துள்ளார்.

எனவே எதிர்வரும் நீதிமன்ற  தவணைகளில் மாணவனின் மர்ம மரணம் தொடர்பில்  அழிக்கப்பட்ட சிசிடிவி  காணொளிகள் ஆதாரமாக பெறப்பட்டு  மாணவனின் மர்ம மரணத்தின் உண்மை நிலையை காட்ட உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியின் பின்னணி

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த மாதம்(05)  மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த  மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் உயிரிழந்த நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர்,  உறவினர்கள் குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டிருந்ததுடன், ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது  தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்  மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



சாய்ந்தமருது மதரஸாவில் உயிரிழந்த முஸ்லீம் மாணவன். கைதான மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல்.samugammedia சாய்ந்தமருது பகுதியில் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை  எதிர்வரும் பெப்ரவரி  மாதம்  01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு  நேற்றையதினம் (18)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்  பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.இதன் போது பாதிக்கபட்ட சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுள் உலமா சபையின் சார்பில்  சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில்  ஆஜராகி இருந்தார்.குறித்த வழக்கினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய   நீதிமன்ற உத்தியோகத்தர் முபாறக் நெறிப்படுத்தி இருந்தார். இதன் போது சம்பவ தினமன்று மத்ரஸாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் சேமிக்கப்பட்டிருந்த  காணொளிகள் சந்தேக நபரான மௌலவியின் உத்தரவின் பேரில்  அழிக்கப்பட்ட நிலையில்  கடந்த நீதிமன்ற தவணைகளில் பொலிஸாரினால் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.இதற்கமைய நீதிவான் அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி அழிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு  உத்தரவு பிறப்பித்திருந்தார்.இதற்கமைய,  அழிக்கப்பட்ட காணொளிகள் மீட்கப்பட்டுள்ளதாக  மன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய சமர்ப்பணங்களை பொலிஸார் மன்றில்  சமர்ப்பித்து குறித்த சிசிடிவி காணொளி  அறிக்கையை  மன்றிற்கு பாரப்படுத்துமாறு  கட்டளை பிறப்பித்துள்ளார்.எனவே எதிர்வரும் நீதிமன்ற  தவணைகளில் மாணவனின் மர்ம மரணம் தொடர்பில்  அழிக்கப்பட்ட சிசிடிவி  காணொளிகள் ஆதாரமாக பெறப்பட்டு  மாணவனின் மர்ம மரணத்தின் உண்மை நிலையை காட்ட உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.செய்தியின் பின்னணிஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த மாதம்(05)  மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த  மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் உயிரிழந்த நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர்,  உறவினர்கள் குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டிருந்ததுடன், ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது  தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்  மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement