• Oct 04 2024

சாய்ந்தமருது மதரஸாவில் உயிரிழந்த முஸ்லீம் மாணவன்...! கைதான மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல்...!samugammedia

Sharmi / Feb 2nd 2024, 4:09 pm
image

Advertisement

அழிக்கப்பட்ட  காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழிநுட்பம் போதாது என்ற அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை  எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றையதினம் (01)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்   பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அரச   பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சம்பவ தினம் இடம்பெற்ற மாணவனது மரணம் தொடர்பில்  பதிவு செய்யப்பட்ட  சிசிடிவி வன்பொருளில் சேமிக்கப்ட்டிருந்த காணொளிகள் மௌலவியின் உத்தரவின் பேரில்  அழிக்கப்பட்ட நிலையிவ்  அதனை மீள பெற்றுக்கொள்வதற்கு   நீதிவானின் உத்தரவிற்கமைய கடந்த நீதிமன்ற தவணைகளில்  அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அரச   பகுப்பாய்வு திணைக்களத்திற்கு  சிசிடிவி வன்பொருளில்  அழிந்த காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்ட விடயத்திற்கு அத்திணைக்களம் தங்களிடம் அழிக்கப்பட்ட காணொளிகளை மீளப்பெறுவதற்கான தொழிநுட்பம் இல்லை என அறிக்கை மன்றிற்கு சமர்ப்பித்ததை  தொடர்ந்து அரச   பகுப்பாய்வு திணைக்களத்தில் சிசிடிவி வன்பொருளில்  அழிந்த காணொளிகளை மீள பெறக்கூடிய தொழிநுட்பம் இல்லை என்ற காரணத்தினால் மீண்டும் அழிக்கப்பட்ட காணொளிகளை பெற்றுக்கொள்வதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிநுட்ப பிரிவிற்கு அனுப்பி வைத்து மீள அழிக்கப்பட்ட காணொளிகளை பெற வேண்டும் என மரணமடைந்த மாணவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்றிற்கு  விண்ணப்பம் செய்தனர்.இதனை அடுத்து நீதிவான் குறித்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 அத்துடன் சம்பவ தினம்  பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காணொளிகளை வன்பொருளில்  அழித்த  சிசிடிவி தொழிநுட்பவியலாளரை  ஏன் பொலிஸார்  கைது செய்யவில்லை என்ற வாதப்பிரதிவாதம் மன்றில் சட்டத்தரணிகளினால் ஆட்சேபனை முறையில்  முன்வைக்கப்பட்டது.

இதன்போது பொலிஸார் குறித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளரை அரச சாட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்றில்   தெரிவித்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக  சிரேஸ்ட சட்டத்தரணி எப்.எம்.ஏ அன்சார் மௌலானா சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் சவுத் முஹமட் ஆஜராகி மன்றில்   இவ்விடயம் தொடர்பில் நீண்ட சமர்ப்பணம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆந் திகதி வரை சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

செய்தியின் பின்னணி

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த செவ்வாய்க்கிழமை (5)   மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த  (வயது-13) மாணவனே மர்மமான முறையில் உயிரிழந்த  நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். 

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் உயிரிழந்த நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள், குறித்த  மாணவனின் மரணம் தொடர்பில் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 


சாய்ந்தமருது மதரஸாவில் உயிரிழந்த முஸ்லீம் மாணவன். கைதான மௌலவிக்கு மீண்டும் விளக்கமறியல்.samugammedia அழிக்கப்பட்ட  காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழிநுட்பம் போதாது என்ற அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை  எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு நேற்றையதினம் (01)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில்   பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.அரச   பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சம்பவ தினம் இடம்பெற்ற மாணவனது மரணம் தொடர்பில்  பதிவு செய்யப்பட்ட  சிசிடிவி வன்பொருளில் சேமிக்கப்ட்டிருந்த காணொளிகள் மௌலவியின் உத்தரவின் பேரில்  அழிக்கப்பட்ட நிலையிவ்  அதனை மீள பெற்றுக்கொள்வதற்கு   நீதிவானின் உத்தரவிற்கமைய கடந்த நீதிமன்ற தவணைகளில்  அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அரச   பகுப்பாய்வு திணைக்களத்திற்கு  சிசிடிவி வன்பொருளில்  அழிந்த காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள அனுப்பி வைக்கப்பட்ட விடயத்திற்கு அத்திணைக்களம் தங்களிடம் அழிக்கப்பட்ட காணொளிகளை மீளப்பெறுவதற்கான தொழிநுட்பம் இல்லை என அறிக்கை மன்றிற்கு சமர்ப்பித்ததை  தொடர்ந்து அரச   பகுப்பாய்வு திணைக்களத்தில் சிசிடிவி வன்பொருளில்  அழிந்த காணொளிகளை மீள பெறக்கூடிய தொழிநுட்பம் இல்லை என்ற காரணத்தினால் மீண்டும் அழிக்கப்பட்ட காணொளிகளை பெற்றுக்கொள்வதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிநுட்ப பிரிவிற்கு அனுப்பி வைத்து மீள அழிக்கப்பட்ட காணொளிகளை பெற வேண்டும் என மரணமடைந்த மாணவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்றிற்கு  விண்ணப்பம் செய்தனர்.இதனை அடுத்து நீதிவான் குறித்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் சம்பவ தினம்  பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காணொளிகளை வன்பொருளில்  அழித்த  சிசிடிவி தொழிநுட்பவியலாளரை  ஏன் பொலிஸார்  கைது செய்யவில்லை என்ற வாதப்பிரதிவாதம் மன்றில் சட்டத்தரணிகளினால் ஆட்சேபனை முறையில்  முன்வைக்கப்பட்டது.இதன்போது பொலிஸார் குறித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளரை அரச சாட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்றில்   தெரிவித்தனர்.இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக  சிரேஸ்ட சட்டத்தரணி எப்.எம்.ஏ அன்சார் மௌலானா சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் சவுத் முஹமட் ஆஜராகி மன்றில்   இவ்விடயம் தொடர்பில் நீண்ட சமர்ப்பணம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.மேலும் குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆந் திகதி வரை சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.செய்தியின் பின்னணிஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த செவ்வாய்க்கிழமை (5)   மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த  (வயது-13) மாணவனே மர்மமான முறையில் உயிரிழந்த  நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் உயிரிழந்த நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள், குறித்த  மாணவனின் மரணம் தொடர்பில் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது    தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல  என  கூறி    பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement