• Sep 28 2024

சாய்ந்தமருது மதரஸாவில் உயிரிழந்த முஸ்லீம் மாணவன்...! மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களின் விளக்கமறியலில் நீடிப்பு...!

Sharmi / Mar 1st 2024, 11:39 am
image

Advertisement

சாய்ந்தமருது பகுதியில் மத்ரஸா ஒன்றில், பாடசாலை மாணவனின் மர்மமான முறையில் உயிரிழந்தமை  தொடர்பிலான CCTV காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றையதினம்(29) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட CCTV காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 5ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

செய்தியின் பின்னணி

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த மாதம்(05)  மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த  மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் உயிரிழந்த நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர்,  உறவினர்கள் குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டிருந்ததுடன், ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது  தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்  மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



சாய்ந்தமருது மதரஸாவில் உயிரிழந்த முஸ்லீம் மாணவன். மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களின் விளக்கமறியலில் நீடிப்பு. சாய்ந்தமருது பகுதியில் மத்ரஸா ஒன்றில், பாடசாலை மாணவனின் மர்மமான முறையில் உயிரிழந்தமை  தொடர்பிலான CCTV காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மௌலவி உட்பட 4 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.குறித்த வழக்கு நேற்றையதினம்(29) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட CCTV காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 5ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.செய்தியின் பின்னணிஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த மாதம்(05)  மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த  மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் உயிரிழந்த நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர்,  உறவினர்கள் குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டிருந்ததுடன், ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.மேலும் குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது  தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை  மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில்  சாய்ந்தமருது பொலிஸாரால்  மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement