• Jun 21 2025

வவுனியாவில் போக்குவரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிதாக நிர்மாணிக்கப்படும் வடிகால்

Chithra / Jun 20th 2025, 8:11 pm
image


வவுனியா வைரவர்கோவில் வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்படும் வடிகானினால் போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் ஆபாயம் உருவாகியுள்ளது.

வீதியின் இரு பகுதிகளிலும் நீண்ட இடைவெளி காணப்படுகின்ற போதிலும் குறித்த வடிகால் வீதியின் மிக அண்மித்தாக அமைக்கப்படுகின்றது. 

இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளமையுடன் நடைபாதையினை பாவிப்பவர்களுக்கும் இது ஆபத்தாக அமைந்துள்ளது. 

மேலும் இவ் வடிகால் வீதிக்கு அண்மித்து அமைக்கப்படுவதினால் பிரிதொரு காலத்தில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் சமயத்தில் இவ் வாடிகாலை தகர்க்க வேண்டிய நிலமையும் உருவாகியுள்ளது. அத்துடன் இவை சட்டவிரோத அரச காணி ஆக்கிரமிப்புக்கும் ஊண்றுகோளாக அமையும்.

எனவே இவ் விடயத்தில் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்து மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு பொதுமக்மள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


வவுனியாவில் போக்குவரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிதாக நிர்மாணிக்கப்படும் வடிகால் வவுனியா வைரவர்கோவில் வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்படும் வடிகானினால் போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் ஆபாயம் உருவாகியுள்ளது.வீதியின் இரு பகுதிகளிலும் நீண்ட இடைவெளி காணப்படுகின்ற போதிலும் குறித்த வடிகால் வீதியின் மிக அண்மித்தாக அமைக்கப்படுகின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளமையுடன் நடைபாதையினை பாவிப்பவர்களுக்கும் இது ஆபத்தாக அமைந்துள்ளது. மேலும் இவ் வடிகால் வீதிக்கு அண்மித்து அமைக்கப்படுவதினால் பிரிதொரு காலத்தில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் சமயத்தில் இவ் வாடிகாலை தகர்க்க வேண்டிய நிலமையும் உருவாகியுள்ளது. அத்துடன் இவை சட்டவிரோத அரச காணி ஆக்கிரமிப்புக்கும் ஊண்றுகோளாக அமையும்.எனவே இவ் விடயத்தில் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்து மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறு பொதுமக்மள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement