• Jun 22 2025

குறைபாட்டை சுட்டிக்காட்டிய சுகாதார அதிகாரியை இழிவாகப் பேசிய நபர் - மன்னார் நகரசபையில் குழப்பம்!

shanuja / Jun 21st 2025, 7:09 pm
image

உற்பத்திப் பொருள் லேபிலில் குறைபாடு உள்ளதென்பதைக் கண்டுபிடித்த மன்னார் நகரசபை அதிகாரி ஒருவருடன் நகரசபைக்குள் நுழைந்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டுள்ளார். 


மன்னார் நகரசபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி பொருள் லேபில் தொடர்பில் காணப்பட்ட குறைபாடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை ஒன்றை மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மேற்கொண்டார். 


இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மன்னார் நகரசபை  அலுவலகத்துக்குள் புகுந்து அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் குறித்த சுகாதார பரிசோதகரையும் அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளார். 


குறித்த சுகாதார அதிகாரி சகோதரை இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால்  அவருடைய இனத்தையும் குறித்த நபர் இழிவாக கதைத்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். அதனையடுத்து  குறித்த நபருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


மன்னார் நகரசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சகோதர இனத்தை சேர்ந்த சுகாதார பரிசோதகர் மன்னார்  பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அண்மைக்காலமாக சுகாதார சீர்கோடுகளுடன் இயங்கி வந்த பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்ற நிலையில் அவரை அச்சுறுத்தும் விதமாக குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைபாட்டை சுட்டிக்காட்டிய சுகாதார அதிகாரியை இழிவாகப் பேசிய நபர் - மன்னார் நகரசபையில் குழப்பம் உற்பத்திப் பொருள் லேபிலில் குறைபாடு உள்ளதென்பதைக் கண்டுபிடித்த மன்னார் நகரசபை அதிகாரி ஒருவருடன் நகரசபைக்குள் நுழைந்து அடாவடித் தனத்தில் ஈடுபட்டுள்ளார். மன்னார் நகரசபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி பொருள் லேபில் தொடர்பில் காணப்பட்ட குறைபாடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை ஒன்றை மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மேற்கொண்டார். இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மன்னார் நகரசபை  அலுவலகத்துக்குள் புகுந்து அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் குறித்த சுகாதார பரிசோதகரையும் அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளார். குறித்த சுகாதார அதிகாரி சகோதரை இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால்  அவருடைய இனத்தையும் குறித்த நபர் இழிவாக கதைத்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். அதனையடுத்து  குறித்த நபருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நகரசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சகோதர இனத்தை சேர்ந்த சுகாதார பரிசோதகர் மன்னார்  பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அண்மைக்காலமாக சுகாதார சீர்கோடுகளுடன் இயங்கி வந்த பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்ற நிலையில் அவரை அச்சுறுத்தும் விதமாக குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement