• May 18 2024

பழக்கடைக்காரர் ஒருவருக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்...!samugammedia

Anaath / Dec 27th 2023, 12:21 pm
image

Advertisement

பழக்கடைக்காரர் ஒருவருக்கு அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் ரூபாய் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சம்பவமானது  சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

மா என்ற முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகேயுள்ள லியூ என்ற பழ வியாபாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளார்.இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது.

மா என்ற முதியவரின் மகன் உயிரிழந்து விட அதன்பின்னர் அவரை, லியூதான் நல்லபடியாக பார்த்துக் கொண்டுள்ளார்.முதியவருக்கு சொந்தக் காரர்கள் இருந்தபோதிலும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

முதியவர் மா உயிரிழக்கும் வரையிலும் லியூ அவரை பத்திரமாக கவனித்துக் கொண்டார்.

இந்நிலையில் முதியவர் உயிரிழந்து விட, அவர் எழுதி விட்டு சென்ற உயிலைப் பார்த்த உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.அதாவது தனக்கு சொந்தமான ரூபாய் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை, தன்னை கவனித்துக் கொண்ட லியூ பேருக்கு முதியவர் மா எழுதி விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் அனைவரும் பழக்கடைக்காரருக்கு எதிராக ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை ஏமாற்றி பழக்கடைக்காரர் சொத்தை அபகரித்து விட்டதாக உறவினர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.

இருப்பினும், 2020ஆம் ஆண்டே, முதியவர் மா தனது வீட்டை எழுதி தந்து விட்டதாக பழக்கடைக்காரர் தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த வாடிக்கையாளருக்கு மூன்று சாகாதரிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


பழக்கடைக்காரர் ஒருவருக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்.samugammedia பழக்கடைக்காரர் ஒருவருக்கு அவரது வாடிக்கையாளர்களில் ஒருவர் ரூபாய் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது  சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மா என்ற முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகேயுள்ள லியூ என்ற பழ வியாபாரியை சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துள்ளார்.இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது.மா என்ற முதியவரின் மகன் உயிரிழந்து விட அதன்பின்னர் அவரை, லியூதான் நல்லபடியாக பார்த்துக் கொண்டுள்ளார்.முதியவருக்கு சொந்தக் காரர்கள் இருந்தபோதிலும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.முதியவர் மா உயிரிழக்கும் வரையிலும் லியூ அவரை பத்திரமாக கவனித்துக் கொண்டார்.இந்நிலையில் முதியவர் உயிரிழந்து விட, அவர் எழுதி விட்டு சென்ற உயிலைப் பார்த்த உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.அதாவது தனக்கு சொந்தமான ரூபாய் 3.80 கோடி மதிப்புள்ள வீட்டை, தன்னை கவனித்துக் கொண்ட லியூ பேருக்கு முதியவர் மா எழுதி விட்டு சென்றுள்ளார்.இதையடுத்து உறவினர்கள் அனைவரும் பழக்கடைக்காரருக்கு எதிராக ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மன நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை ஏமாற்றி பழக்கடைக்காரர் சொத்தை அபகரித்து விட்டதாக உறவினர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.இருப்பினும், 2020ஆம் ஆண்டே, முதியவர் மா தனது வீட்டை எழுதி தந்து விட்டதாக பழக்கடைக்காரர் தெரிவித்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.இதேவேளை குறித்த வாடிக்கையாளருக்கு மூன்று சாகாதரிகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement