உடப்புசலாவை போலீஸ் பிரிவிற்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 4:15 மணியளவில் மரம் ஒன்றின் கிளைகள் விழுந்துள்ள நிலையில் வீட்டின் ஒரு பகுதி உடைந்து வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 55 வயது உடைய வி.கே ஆரியபால என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் நால்வர் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அறிந்த கிராமவாசிகள் விரைந்து வீட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டுள்ள நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் உடப்புசலவை போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
மலையகத்தில் மரம் விழுந்து ஒருவர் பலி உடப்புசலாவை போலீஸ் பிரிவிற்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை 4:15 மணியளவில் மரம் ஒன்றின் கிளைகள் விழுந்துள்ள நிலையில் வீட்டின் ஒரு பகுதி உடைந்து வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் 55 வயது உடைய வி.கே ஆரியபால என்பவரே உயிரிழந்தார்.சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் நால்வர் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தை அறிந்த கிராமவாசிகள் விரைந்து வீட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டுள்ள நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் உடப்புசலவை போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்