உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதியமைச்சின் கீழ் 24 நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளடங்குகின்றன.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கு 24 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அமைச்சுடன் தொடர்புடைய இதர நிறுவனங்களில் மொத்தமாக 6,026 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. புதிய ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆகவே நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட நீதிமன்ற கட்டட அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். நீதிதுறை சுயாதீனமான முறையில் செயற்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றார்.
நிலுவையிலுள்ள 11 இலட்சம் வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை நீதி அமைச்சர் தெரிவிப்பு உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நீதியமைச்சின் கீழ் 24 நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளடங்குகின்றன.பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் இம்முறை வரவு - செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கு 24 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் மற்றும் நீதித்துறை அமைச்சுடன் தொடர்புடைய இதர நிறுவனங்களில் மொத்தமாக 6,026 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. புதிய ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படும்.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட நீதிமன்ற கட்டட அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். நீதிதுறை சுயாதீனமான முறையில் செயற்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றார்.