• Feb 02 2025

77ஆவது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

Chithra / Feb 2nd 2025, 11:40 am
image


தேசிய மறுமலர்ச்சியில் இணைவோம் என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்க வளாகத்தில் 77வது சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது .

இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழாவை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு குறைந்த அசௌகரியத்துடன், அதிக மக்கள் பங்கேற்புடன் நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இராணுவ அணிவகுப்பு 1,873 இராணுவ வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது,

இந்த வருட அணிவகுப்புக்கு முப்படைகளின் கவச வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 19 விமானங்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3 விமானங்கள் மட்டுமே தேசத்தின் கொடியை வானில் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

சுதந்திர தினத்தன்று நண்பகல் 12.00 மணிக்கு கடலில் கப்பலில் கடற்படையினரால் நடத்தப்படும் பாரம்பரிய 25 துப்பாக்கி வீர வணக்கம் இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.

77ஆவது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் தேசிய மறுமலர்ச்சியில் இணைவோம் என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்க வளாகத்தில் 77வது சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது .இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழாவை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு குறைந்த அசௌகரியத்துடன், அதிக மக்கள் பங்கேற்புடன் நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.இராணுவ அணிவகுப்பு 1,873 இராணுவ வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது,இந்த வருட அணிவகுப்புக்கு முப்படைகளின் கவச வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு 19 விமானங்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3 விமானங்கள் மட்டுமே தேசத்தின் கொடியை வானில் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.சுதந்திர தினத்தன்று நண்பகல் 12.00 மணிக்கு கடலில் கப்பலில் கடற்படையினரால் நடத்தப்படும் பாரம்பரிய 25 துப்பாக்கி வீர வணக்கம் இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement